மே 17 அன்று மாலை, TGROC ஏற்பாடு செய்திருந்த “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்” அனுசரிக்கப்பட்டது. 4 முதல் 7ஆம் நிலை ஆத்திசூடி அருந்தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் இனப்படுகொலை வரலாறு பகிரப்பட்டு, “The Last Kite” என்ற கதை சொல்லப்பட்டு விவாதிக்கப்பட்டது. கதையில் “குறியீடாக” வந்த பட்டம் வரைந்தும், கதையில் வரும் சிறுமி “இசை”, அவர் தம்பி “பாலா”விற்குக் கடிதம் எழுதியும் மாணவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். அவை படிக்கப்பட்டு, கீழே உள்ள உறுதிமொழி ஏற்கப்பட்டு, அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திய, விதைத்த நம்பிக்கையுடன் நினைவேந்தல் முற்றுப் பெற்றது.
உறுதிமொழி
“நான், இந்த நாளில் உறுதியளிக்கிறேன் –
- போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குழந்தைகளை நான் நினைவுகூறுகிறேன்.
- இனவாதம், வேறுபாட்டு வன்முறைகள், மற்றும் அழிவுகளை எதிர்க்கிறேன்.
- நான் மற்றவர்களை நேசிக்க, புரிந்துகொள்ள, மதிக்க பயில்கிறேன்.
- எல்லா இனத்தையும், மொழியையும், சமுதாயத்தையும் சமமாய்ப் பார்க்க விரும்புகிறேன்.
- யாரும் மீண்டும் போரால் பாடுபடக் கூடாது என்பதற்காக, அமைதி பரப்பும் குழந்தையாக நான் நடப்பேன்.
நினைவுகள் மறக்கப்படக்கூடாது. அமைதி மட்டுமே எதிர்காலம்.
அது எனது உறுதி.”
No comments:
Post a Comment